திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில் சேனையூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான மார்க்கண்டு மேவிநாதன் என்ற நபரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.