அவுஸ்ரேலியாவில் தீவிரமடைந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட, கனடாவின் தீயணைப்பு குழுவொன்று அவுஸ்ரேலியாவிற்கு சென்றுள்ளது.
காட்டுத் தீயை அணைப்பதற்கு 3,000 படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
மேலும் இதில் கனடாவை சேர்ந்த 21 கனேடியர்கள் கொண்ட குழுவும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவிற்கு மூன்று தீயணைப்பு படை குழுக்கள் அனுப்பபட்டுள்ள நிலையில், நான்காவது குழு இன்று (சனிக்கிழமை) நியூ சவுத் வேல்ஸிற்கு சென்றுள்ளது.
மேலும், அழிக்கப்படக்கூடிய நகரங்களில் வசிப்பவர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அங்கிருந்து வெளியேற்றிவருகின்றனர்.