நா. உறுப்பினர் மஸ்தானின் அரிசி ஆலையில் கைவரிசை காட்டிய இளைஞன் கைது

kaithu
kaithu

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினரின் அரிசி ஆலையில் கைவரிசை காட்டிய 34 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா, குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களுக்கு சொந்தமான அரிசி ஆலையில் 250 நெல்லு மூடைகள் கடந்த திங்கள் கிழமை திருடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறையில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறையினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் போது வவுனியா வைரவபுளியங்குளத்தை சேர்ந்த 34 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து 90 நெல்லு மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.  

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதிமன்றில் முடுற்படுத்த காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியை சேர்ந்த 34 வயது இளைஞராவார்.