அதிகூடிய விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது

kaithu
kaithu

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகூடிய விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்த நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின கல்ஓயா பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை காவல்துறையினர் சோதனையிட்டனர்.

இதன்போது, அதிலிருந்து 100 லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைதானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் ஒரு லீற்றர் டீசலை 1,100 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேநேரம், எட்டு இலட்சத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான 2,160 லீற்றர் மண்ணெண்ணெய், கல்முனை – பொதுச் சந்தைப் பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார்.

அத்துடன், காலி – தல்கம்பொல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து 119 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.