வெல்லாவெளி – தம்பலாவத்தை பகுதியில் கவனக்குறைவால் உடல் வலிக்குத் தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவன் கடந்த புதன்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர் ஒன்றரை வயதுடைய ஹரிகரன் துசேன் என தெரிவிக்கப்படுகின்றது.