திருகோணமலை மாவட்டம் மூதூர் வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் திடீர் பயணம் ஒன்றை நேற்று மேற்கொண்டார்.
இதில் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விடயங்களும் இதன் போது பேசப்பட்டது.
வைத்தியசாலையில் நிலவும் குறைகள் தொடர்பில் உரிய தீர்வினை பெற்றுத் தருவதாகவும் இதன் போது தெரிவித்தார்.