நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பு திருத்தத்தின் அவசியத்தை மல்வத்து பீட மகாநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு எதிர்க் கட்சியினர் தனது ஆதரவை வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய சிம்மாசன பிரசங்க உரையில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.