கொழும்பு- பதுளை பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில், இன்று (04) புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது.
இச் சம்பவம் சுமார் மாலை 3.45 மணியளவில் வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம் பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை புகையிரத நிலையம் வரை பயணிகளை ஏற்றிச்சென்ற உடரட மெனிக்கே என்ற புகையிரதமே தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
எனினும் ரயில் பாதையை சீர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், அதன்பின் மலையக ரயில் சேவைகள் வழமை போல் செயற்படும் என ரயில்வே நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.