மன்னாரில் 10 கோடி ரூபா பெறுமதியான ஐஸுடன் இருவர் கைது!

kaithu
kaithu

மன்னார் வீதித் தடுப்பில் வைத்து 10.4 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மொத்தப் பெறுமதி 10 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

தலைமன்னாரிலிருந்து வங்காலை பகுதிக்கு கெப் ரக வாகனத்தில் போதைப்பொருளை கொண்டு செல்ல இருவரும் முயற்சித்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக, கைப்பற்றிய போதைப்பொருளுடன் மன்னார் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.