அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கம்- இலங்கை க்லியர் நிறுவனம் மறுப்பு

atm
atm

இலங்கையிலுள்ள அனைத்து வங்கிக் கட்டமைப்புகளும் ஹெக்கர்களின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகள் உண் இல்லை என இலங்கை க்லியர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில்,

“பல்வேறு குழுவினரால் பல்வேறு நோக்கத்துடன் அவ்வாறான போலித் தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படுகின்றன.

இது நிதி துறையின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக எவ்வித கொள்கைளும் அற்ற நபர்களினால் பரப்பும் போலித்தகவலாகும்.

இலங்கை ATM கட்டமைப்புகளுக்கு எவ்வித ஆபத்துகளும் இலல்லை. ATM சேவை பாதுகாப்பாக உள்ளது என அனைத்து வங்கிகளும் உறுதி செய்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கிகளின் கட்டமைப்புகளிலும் ஹெக்கர்கள் ஊடுருவியுள்ளதாகவும், எனவே தானியங்கி அட்டைகளை பயன்படுத்த வேண்டாம் என சில செய்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.