மதவாச்சியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

IMG 20230119 WA0048
IMG 20230119 WA0048

மதவாச்சி பகுதியில் ஹெரோயின் தூளினை தனது உடமையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளதாக மதவாச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இவ் கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 
நேற்று (19) பிற்பகல் மதவாச்சி  பகுதியில் காவற்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஹெரோயின் தூள் தனது உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவரிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் தூள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 50 வயதுடைய இரத்மலானை பகுதியை சேர்ந்தவரை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.