வவுனியாவில் போதை ஏற்படுத்தக்கூடிய மருந்து விற்பனை ஒருவர் கைது – மருந்து வில்லைகள் கைப்பற்றல்!

IMG 20230223 WA0065 1
IMG 20230223 WA0065 1

வவுனியாவில் போதையினை ஏற்படுத்தக்கூடிய  மருந்துகளை விற்பனை செய்த ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 400 மருந்து வில்லைகளையும் கைப்பற்றியுள்ளனர்.


போதையினை ஏற்படுத்தக்கூடிய மருந்து விற்பனை செய்வதாக போதை தடுப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஜெயக்கொடி அவர்களின் ஆலோசனையில் உப காவற்துறை பரிசோதகர் மதுசங்க அவர்களின் வழிகாட்டலிலான காவற்துறை குழுவினர் திருநாவற்குளம் பகுதியில் குறித்த நபர்களை மறித்து சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது அவரின் உடமையிலிருந்து PREGABALIN CAPSULES GABIN-150 என்ற போதையினை ஏற்படுத்தக்கூடிய 400 மருந்து வில்லைகளை கைப்பற்றியதுடன் குறித்த மருந்துனை வைத்திருந்த 23வயதுடைய இளைஞனை காவற்துறையினர் கைது செய்தனர்.

PREGABALIN CAPSULES GABIN-150 என்ற  குறித்த மருந்துகள் அளவிற்கு அதிகமாக உள்கொள்ளும் சமயத்தில் போதையினை ஏற்படுத்தக்கூடியது எனவும் மருந்தகங்களில் 20 ரூபா தொடக்கம் 50 ரூபாவிற்குள் விற்பனை செய்யப்படும் மருந்தினை இவர்கள் 500ரூபா தொடக்கம் 600ரூபா வரையில் விற்பனை செய்வது காவற்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.