மக்களை நசுக்கி ஆட்சியைத் தொடர அரசு முயற்சி! – டலஸ்

dalash
dalash

“மக்களைக் கஷ்டப்படுத்தி – அடிமைப்படுத்தி – கொடுமைப்படுத்தி ஆட்சியைத் தொடரலாம் என அரசு தப்புக்கணக்குப்போட்டுள்ளது” – என்று சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெரும எம்.பி. குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஒரு பக்கம் பொருட்களின் விலைகளை அதிகரித்த அரசு மறுபக்கம் வரிகளையும் உயர்த்தியது. இப்போது, தமக்கு எதிராகப் பொங்கியெழுவோரை அடக்குவதற்காகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற கொடிய சட்டத்தையும் நிறைவேற்ற அரசு படாதபாடுபடுகின்றது.

அரசின் இந்த அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதில் இன, மத, கட்சி வேறுபாடு இருக்கக்கூடாது. இப்படியான வேற்பாடுகளால்தான் நாடு பின்னோக்கிப் பயணித்தது.

இன, மத, கட்சி வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் ஓரணியில் நிற்க வேண்டும்.” – என்றார்.