பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர் எண்ணிக்கை வெளியீடு

uni
uni

இம்முறை இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 45,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்தார்.

திறந்த பல்கலைக்கழங்களில் சுமார் ஒரு இலட்சம் மாணவர்களை இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை தொடர்பில் அடுத்த வாரமளவில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

எதிர்காலத்தில் இலகுவில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் பட்டப்படிப்பிற்கு மேலதிகமாக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.