லிபியா மீது வான்வெளித் தாக்குதல் – 28 பேர் பலி

லிபியா தலைநகர் திரிபோலியின் காட்ரா பகுதியில் அமைந்துள்ள ராணுவ பள்ளி மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதலில் 28 பேர் பலியாகினர்.

இத்தாக்குதலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 28 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இத்தகவலை அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

லிபியாவில் கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அரசுப்படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் லிபியா தலைநகர் திரிபோலியின் காட்ரா பகுதியில் அமைந்துள்ள ராணுவ பள்ளி மீது நேற்று தாக்குதல் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.