அச்சுவேலியில் இனம்தெரியாத நபர்களினால் வீடு சேதம்

dc17c571 f05e 4628 b4d7 92dd26f859d9
dc17c571 f05e 4628 b4d7 92dd26f859d9

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில்
நேற்றிரவு வீடு ஒன்று இனம்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு ஒன்பது முப்பது மணி அளவில் திடீரென்று உட்புகுந்த கும்பல் வீட்டில் கண்ணாடிகள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் கதவை பூட்டிய நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் கனரக வாகனத்தில் வந்து தாக்குதலை மேற்கொண்டதாகவும் வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.