ஈழத்து சிதம்பர பாத யாத்திரை ஆரம்பம்

IMG 20200102 WA0006
IMG 20200102 WA0006

அகில இலங்கை சைவ மகாசபையின் வருடாந்த ஈழத்து சிதம்பர பாத யாத்திரை இன்று 5ம் நாள் காலை ஆரம்பமானது.

“மகேசன் பணிக்காய் அர்ப்பணித்து மானிடம் காப்போம்” எனும் தொனிப்பொருளில் குறித்த பாதயாத்திரை இடம்பெற்றுள்ளது.

சைவ மக்களின் மிக முக்கிய விரதமான திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகாசபையின் ஏற்பாட்டில் ஆன்மீக பாத யாத்திரை இன்று காலை 7 மணிக்கு சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் ஆலயம் வரை சென்றடையவுள்ளது.