நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் இல்லத்தில் பழைய இரும்புகளைத் திருடிச் சென்ற மூவர் கைது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கோப்பாய் – இராசபாதையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
வாக்குமூலத்தை கோப்பாய் காவல் நிலையத்தில் வழங்கியிருந்தார்.
மேலும் கைப்பற்றப்பட்ட பழைய இரும்புகள் தன்னுடையவை என நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் நேற்றிரவு தனது வாக்குமூலத்தை தெரிவித்திருந்தார்.
திருநெல்வேலி பாற்பண்ணை வீதியைச் சேர்ந்த மூவரே இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.