நிந்தவூரில் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை தாக்கிய தலைமை உத்தியோகத்தர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்றிரவு (5) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரந்த ஜயலத் தலைமையிலான குழுவினர் குறித்த நபரை கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளையும், தேடுதல்களையும் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு நிந்தவூரில் உள்ள வீடொன்றில் வைத்து பொலிஸார் குறித்த அதிகாரியை கைது செய்துள்ளனர்.
குறித்த அதிகாரி இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.