எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச பிரதமராவது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
கட்டான பிரதேசத்தில் நேற்று (5) மக்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
சஜித் பிரதமராவதற்கும் கட்சிக்காகவும் தான் வீதியில் இறங்கி போராடுவதற்கும் தயாராகவுள்ளளேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பொதுஜன பெரமுனவிலிருக்கும் பலரும் துப்பாக்கிகளை கையளித்திருப்பதாகதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
அவர்களும் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கவில்லை எனின் அவ்வாறானவர்களும் கைது செய்யப்பட வேண்டும்.
கடந்த அரசாங்கத்திலிருந்தவர்களை கைது செய்வதற்காக மக்கள் ஆணையை வழங்கவில்லை எனவும், மோசடிக்காரர்களுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் எதிர்க்கட்சியில் செயற்படுவதற்கு நாம் அஞ்சப் போவதில்லை” என தெரிவித்தார்..