சுதந்திர தின நிகழ்வு – பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறைப்பு

indipendance day
indipendance day

பாதுகாப்பான நாடு – வளமான தேசம் தொனிப்பொருளில் இம்முறை இடம்பெறவுள்ள 72வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இம்முறை இடம்பெறவுள்ள ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை 30 வீதத்தினால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய சுதந்திர தின நிகழ்விற்கேற்புடைய கலாசார நிகழ்வுகளை மாத்திரம் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.