எதிர்காலத்திற்கான இளைஞர்கள் எனும் தொனிப்பொருளில் ஈழப்புரட்சி அமைப்பு அமைப்பின் இளையோர் மாநாடு நேற்று (5) வவுனியாவில் இடம்பெற்றது.
ஈரோஸ் அமைப்பின் தலைவர் எஸ்.துசியந்தன் தலைமையில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஈரோஸ் அமைப்பின் தலைவர் எஸ்.துஸ்யந்தன், அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாணிக்கம் ஜெகன் மற்றும் அமைப்பின் பிரமுகர்கள், வடக்கு கிழக்கை சேர்ந்த ஈரோஸ் அமைப்பின் இளைஞர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.