அருட்தந்தை உட்பட பொதுமக்கள் சுட்டுக்கொலை – நினைவு தினம் அனுட்டிப்பு

IMG 5514
IMG 5514

இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் மற்றும் அவருடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட அப்பாவி சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவு நாள் இன்றைய தினம் அனுட்டிக்கப்பட்டது

இன்று காலை 7 மணியளவில் வங்காலை புனித ஆனாள் தேவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக அனுட்டிக்கப்பட்டது

தள்ளாடி பகுதியை சேர்ந்த இராணுவத்தினர் 1985 ஆண்டு தை மாதம் ஆறாம் நாள் வங்காலை தூய ஆனாள் பங்குப் பணிச் செயலாளராக சேவையாற்றிய அருட்பணி மேரி பஸ்டியன் மற்றும் அவருடன் தங்கியிருந்த அப்பாவி சிறுவர்கள் உட்பட பொது மக்கள் 10 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த நினைவுநாள் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களும் மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை உட்பட அருட்தந்தையர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இதன் 35 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு மற்றும் பொது பிரார்த்தனை இடம்பெற்றதுடன் அவர்களுடைய நினைவாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.