ஹேமசிறி மற்றும் பூஜிதவின் விளக்கமறியல் நீடிப்பு

hemasri poojitha
hemasri poojitha

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று (6) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக இருவர் மீதும் கொலைக்குற்றம் புரிந்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.