இராணுவத்தினர் வசமுள்ள கரைச்சி பிரதேச சபையின் பொது நூலக காணியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் ஜனாதிபதி மற்றும் பிரதமரிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு மீளக்குடியமர்வுக்குப் பின்னர் கரைச்சி பிரதேச சபைக்குரிய பொதுநூலக வளாகம் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
குறித்த காணி விடுவிக்கப்படாமையினால் பொதுநூலகத்தினை நிருமாணிப்பதற்கான பணிகள் ஸ்தம்பித்து காணப்படுகின்றது.
இந்நிலையில் 23.02.2018 அன்று இடம்பெற்ற கரைச்சி பிரதேச சபையின் 2வது அமர்வில் இராணுவம் கைப்பற்றியுள்ள 3.5 ஏக்கர் நிலப்பரப்பினையுடைய காணியை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.