மேல் மாகாணத்தில் 521 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.
இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று (6) மேல்மாகாண சபையின் கொழும்பு அழகியற் கலையரங்கு கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ஆரம்பக் கல்வி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கில மொழி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இவ் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்காக கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இந் நியமனம் வழங்கப்படவுள்ளது.