திருகோணமலை வீரமாநகர் கிராமத்தில் மாலைநேர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் இன்று (5) வழங்கி வைக்கப்பட்டது.
மருதம் சனசமூக நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க சமூக அபிவிருத்திக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பிரகாஷ் மாவட்ட அமைப்பாளர் கே.குணா மற்றும் அக்கட்சியின் பிரதிநிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
அங்கு வசிக்கும் மக்களுக்கு அரசினால் வழங்கப்படும் வாழ்வாதாரத் திட்டங்கள், மானியத் திட்டங்கள், பழத் தோட்டங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வும் நடைபெற்றது.
அத்துடன் அவற்றிற்கான விண்ணப்ப படிவங்களும் வழங்கப்பட்டது.
மேலும் அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் அறியப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் சம்பந்தமான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து பள்ளிக் குடியிருப்பு மாதுமையம்பாள் பாடசாலையில் கல்வி கற்கும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறார்களுக்கும் அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டது.