கனடா நாட்டு பிரஜைகள் இருவர் கைது!

arrest 6
arrest 6

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு கனடா பிரஜைகள் நேற்று (5) இரவு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இலங்கையிலிருந்து கனடாவில் தஞ்சம் கோரி கனடா நாட்டு பிரஜாவுரிமையை தற்போது கொண்டுள்ள இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தங்கி நிற்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த போதும் அவர்கள் மீண்டும் கனடாவிற்கு செல்லாத காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.