கடந்த அரசாங்கம் மக்களுக்கு செய்த 99 சதவீத தவறுகளுக்கு ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
கிரிபத்கொடாவில் நேற்று (05) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கம் மக்களை மறந்துவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இதற்கு முழு பொறுப்பு.
முன்னைய அரசாங்கம் செய்த தவறுகளுக்கான அறுவடையினை தற்போது அனுபவிக்கிறது.
இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவற்றினால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.