பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – மடுல்சீமை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது.
பசறை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து இன்று மாலை 05 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தோர் பசறை வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.