முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (7) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மோசடியான முறையில் நிதி பரிவர்தனை மேற்கொண்டு அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில் அபிவிருத்தி லொத்தர் வாரியத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.