ராஜீவ் காந்தி கொலை – ரவிச்சந்திரனுக்கு பிணை

ravichandran
ravichandran

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பிணை வழங்கப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரனுக்கு ஒருமாத காலம் பிணை வழங்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கோரியிருந்த நிலையில் 15 நாட்கள் பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை பிணை செல்கிறார்.

இதுவரை 4 முறை ரவிச்சந்திரன் பிணையில் சென்றுள்ள நிலையில் குறித்த காலப்பகுதியில் எதுவித அசம்பாவிதங்களிலும் ஈடுபடவில்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதே குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கும் அண்மையில் ஒரு மாத பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.