அடுத்த ஆண்டு முதல் புதிய வங்கி சட்டம்!

central Bank
central Bank

இலங்கை மத்திய வங்கி அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து புதிய வங்கி சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் வங்கிக் கொள்கையின் 13 ஆவது வருடாந்த அறிக்கையை வெளிடும் நிகழ்விலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு நிதி பரிவர்த்தனை அறிக்கை சட்டம், பண மோசடி தடுப்பு சட்டம் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு பணம் வழங்குவதை தடுப்பது தொடர்பான பல திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

பயனாளியுடன் தொடர்புடைய நிறுவனம் சார்ந்த சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 20 ரூபா நாணய குற்றி ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் 2000 ரூபா பெறுமதியான நாணய தாள்களுக்கு பதிலாக மற்றுமொரு புதிய நாணய தாள்களை அச்சிட திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.