இந்தியாவை வீழ்த்த சிரேஷ்ட வீரர்களின் பங்களிப்பு அவசியம்

Kusal
Kusal

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்த சிரேஷ்ட வீரர்களின் பங்களிப்பு அவசியம் என இலங்கை வீரர் குசால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குசால் பேரேரா கூறுகையில்,

“நான் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த தொடரில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

ஒரு அணியாக இணைந்து விளையாடுவது அவசியம். சிரேஷ்ட வீரர்க சிறப்பாக செயல்பட வேண்டும். அதேவேளையில், அணியில் சில இளம் துடுப்பாட்ட வீரர்களும், பந்துவீச்சாளர்களும் இருப்பது சிறப்பானது.

இந்தியா சிறந்த அணி. உலகளவில் முன்னணி வரிசையில் உள்ளது. ஒரு அணியாக மைதானத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய முயற்சிப்போம். எங்களுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து களம் இறங்குவோம்” என தெரிவித்தார்.