மன்னாரில் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிகழ்சித்திட்டம்

IMG 5493
IMG 5493

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினுடைய பணிப்புரையின் கீழ் இளைஞர் யுவதிகளை நவீன யுகத்தினுல் உள்ளீர்கும் முகமாக உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் இன்றைய தினம் (7) மன்னாரில் நடைபெற்றது.

இன்று காலை 10 மணியலவில் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அதன் மாவட்ட உதவி பணிப்பாளர் திரு.மஜித் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

கிராம ரீதியாக உள்ள இளைஞர்களை எதிர்கால தொழில் வாய்ப்பை ஊக்குவிக்கும் முகமாக குறித்த நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது

குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு பூலோகராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதிநிதிகளான ஜசோதரன் ஜோசப் நயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

குறித்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பதிவு செய்ய தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் இணையத்தளத்தின் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு எதிர்கால செயற்திட்டங்களில் இணைத்து கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது