தன் மீதான கொலை குற்றச்சாட்டினை மறுப்பு – ரணில் விக்ரமசிங்க!

ranil 2
ranil 2

தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.

தன்னை கொலை செய்ய ரணில் விக்கிரமசிங்க சதி திட்டத்தில் ஈடுபட்டதாக, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களிற்கு நாடாளுமன்றில் இன்று பதிலளிக்கையில்,

“நான் சதித்திட்டங்களில் ஈடுபடும் ஒருவர் அல்ல.

தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் தொலைபேசி உரையாடல்கள் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட குறுந்தகடுகளிலிருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த பதிவுகள் இப்போது சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் பரப்பப்படுகின்றன. அவை ஊடகங்களிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளிலும் எப்படி சென்றடைந்தது என்பது பெரிய கேள்விக்குறி.

பரப்பப்படும் ஒலிப்பதிவுகளை பொலிஸாரிடமிருந்து பெற்று சபாநாயகர் ஆராய வேண்டும். எந்த உறுப்பினராவது சட்டத்தை மீறியிருந்தால் இந்த சபைக்கு தெரியப்படுத்துங்கள்“ என தெரிவித்தார்.