அவுஸ்ரேலிய காட்டுத்தீ – பிரதமர் நிவாரண நிதி ஒதுக்கீடு

aus pm
aus pm

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ நிவாரண உதவிக்காக 2 பில்லியன் அவுஸ்ரேலிய டொலர் ஒதுக்கீடு செய்வதற்கு அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 24 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் பல்லாயிரக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்துள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

பல மாதங்களுக்கு பிறகு சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதனால் காட்டுத்தீயின் வேகம் குறைய தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.