வட மாகாண புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
புதிய ஆளுநராக கடந்த வாரம் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில் இன்று தனது பணிகளை ஆரம்பிப்பதற்காக ஆயரிடம் ஆசி பெற்றுக் கொள்ளும் வகையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் எதிர்கால திட்டங்கள் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.