துமிந்த சில்வாவை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

thayasri
thayasri

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை ஜனாதிபதியினால் விடுவிக்க முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (07) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலருடைய தேவைக்கு ஏற்ப அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்றத்தினால் அவரை விடுவிக்க முடியாமையின் காரணமாக அவரை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.