அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை

usa flag
usa flag

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அரசு ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள பயண அறிவுரை அறிக்கையில்,

“மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் உச்சநிலை பதற்றத்தால் அங்குள்ள அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவுகிறது. எனவே அமெரிக்க மக்கள் இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளுக்கு பயணம் செய்வதில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக ஜெருசலேம், மேற்குகரை மற்றும் காசா ஆகிய பகுதிகளுக்கு செல்வதை அமெரிக்க மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.