அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல்

usa1
usa1

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை (3) அமெரிக்கா நடத்திய வான் வழித் தாக்குதலில் ஈரானின் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா சவால் விடுத்தது. அமெரிக்காவின் செயல்களுக்கு பழி தீர்ப்போம் என ஈரானும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.