ஐ.நா பாதுகாப்பு தொடரில் ஈரான் பங்கேற்க தடை

javakath
javakath

அமெரிக்காவில் 9ம் திகதி நடைபெற உள்ள ஐ.நா பாதுகாப்பு கூட்டத்தில் ஈரான் வெளியுறவு மந்திரி பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தீவிரம் காட்டிய ஜாவத் ‌ஷாரீப் விசா வழங்குமாறு அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த அமெரிக்க அரசு அவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதித்தது.

ஜனாதிபதி டிரம்ப் நிருவாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஐ.நா பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜாவத் ‌ஷாரீப்பை நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.