பெரு நாட்டில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சுற்றுலா பயணிகள் பயணம் செய்த பேருந்தில் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட சுமார் 60 பேர் பயணம் செய்தனர்.
வாகன சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 42 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.