யாழ் இளைஞர் மாபியா குழுவினரால் அடித்துக் கொலை!

mafia gang attack
mafia gang attack

துருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்கு நுழைய முற்பட்ட யாழ்ப்பாண இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்டார்.

38 வயதுடைய நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் எனும் இளைஞன் மாபியா குழுவினால் அடித்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் துருக்கியில் இருந்து கிறீஸ் நாட்டுக்குள் கடந்த 24ம் திகதி குடியேறிகளை அழைத்து செல்லும் மாபியா குழுவினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞர் கிறீஸ் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக துருக்கி பொலிஸார் மீட்டுள்ளனர்.