பாடசாலை சீருடைக்கான வவுச்சர் இன்று முதல் (8) விநியோகிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
சலக அரச பாடசாலைகளுக்கும், பிரிவெனா பாடசாலை மாணவர்களுக்குமான இச்சீருடைக்கான வவுச்சர்களை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று நாடு பூராகவும் உள்ள சகல அரச பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைக்கான வவுச்சரை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் 11 பிரிவுகளின் வகைப்படுத்தலுக்கமையவே விநியோகமாகவுள்ளது. அதன்படி 440 ரூபா முதல் ஆயிரத்து 800 ரூபா வரை பாடசாலை மாணவர்களின் தர அடிப்படையில் வவுச்சரின் பெறுமதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.