ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த நபர் நேற்றைய தினம் (7) கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி பலியாகியுள்ளார்.
இறந்தவர் திருகோணமலை கொட்பே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய உபுல் சமிந்த என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இறப்பு தொடர்பான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.