சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது

04
04

வாழைச்சேனை வன அதிகாரிகளின் விஷேட சுற்றிவளைப்பில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் உட்பட இருவர் இன்று (09) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என வாழைச்சேனை வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வட்டார வன உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடதக்கது.