ஈரானிய தாக்குதலுக்கு இங்கிலாந்து கண்டனம்!

poris johnson
poris johnson

ஈராக்கிலுள்ள அமெரிக்க தளங்களின் மீதான கஏவுகணைத் தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பொறுப்பற்ற ஆபத்தான தாக்குதல்களை மீண்டும் செய்யவேண்டாம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரானிய தாக்குதலைத் தொடர்ந்து அவசர விரிவாக்கக் குழுவினைக் கூட்டிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

வளைகுடா பிராந்தியத்தில் பிரித்தானிய நலன்களைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கின்றோம்.