அரசஅதிகாரியின் வீட்டில் கொள்ளை

nafgai
nafgai

மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தம்பதியினரை கட்டி வைத்து விட்டு சுமார் 25 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(05) 2.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருடர்களின் தாக்குதல்களுக்கு உள்ளான குறித்த குடும்பத்தின் தலைவி மன்னார் மாவட்டச் செயலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த திருட்டுச் சம்பவம் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,திருடர்களை பிடிப்பதற்கான விசாரணைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டு வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.