வல்வெட்டித்துறையில் வரையப்பட்ட புலி சுவரோவியம் அழிப்பு பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினரின் உத்தரவிற்கமைய அழிக்க வைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை வேம்படி பகுதியில் நேற்று புதன்கிழமை அப்பகுதி இளையோர் ஒன்றிணைந்து புலி ஒன்றின் படத்தினை சுவரோவியமாக வரைய முனைந்துள்ளனர்.
புலியின் படத்தினை வரைந்து கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு பொலிஸாருடன் வந்த புலனாய்வு பிரிவினர் புலிப்படம் கீற முடியாது உடனடியாக கீறிய படத்தினை அழிக்க கூறியுள்ளனர்.
வரையப்பட்ட படத்தினை அழிக்கும் மட்டும் அவ்விடத்தில் புலனாய்வாளர்கள் நின்றுள்ளனர்.
அங்கிருந்து செல்லும் போது அவ்விடத்தில் நின்ற இளையோர் மற்றும் படம் வரைந்தவர்களின் பெயர் விவரங்கள் அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை பதிவு செய்து சென்றனர்.
இது தொடர்பில் மக்கள் தமது விசனத்தினை தெரிவித்துள்ளனர்.